Monday, 16 November 2015

வேஷம் தெரியாதா.




ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியாதா-உன்னை
யாருண்ணும் புரியாதா-நீ 
போடுற வேசமும் ஆடுற நாடகமும்
பார்த்துதான் சிரிக்காதா!
பட்டதும் நினைக்காதா!

என்னென்ன பொய்யெல்லாம்-பாவி
இன்னும்தான் சொல்லுவ--உனக்கு
கண்ணென்ன நொள்ளையோ எண்ணமும் இல்லையோ
மனசும்தான் பேசாதா!
மனுசந்தான் நீதானா!

முன்னாடி பின்னாடி--பாரு
உன்னைத்தான் கண்ணாடி--கூறு
என்னதான் சொல்லுது சொன்னதும் உள்ளது.
ஊரேதான் கண்ணாடி
கூறாது பொய்யாடி.

கிழிஞ்சிறிச்சி வேட்டிரெண்டா--மானம்
அழிஞ்சபின்னும் வெக்கமுண்டா-தர்ம
வேலிதாண்டித் திருடியதும் வேட்டியப்போ கிழிஞ்சதும்
பார்க்கலையோ ஊருதான்
நாக்கில்லையோ பேசத்தான்,

வாசம்நீ பூசினாலும்-பொய்
வேசம்நீ போட்டாலும்.--அது
வாடிப்பின் நாறாதோ!வக்கனையும் கூறாதோ!
ஊரென்ன பாப்பாவா!
நீயென்ன மாப்பாவா!

அண்ணனும் போவதெப்போ--குந்தத்
திண்ணைகாலி ஆவதெப்போ--இந்த
எண்ணம்தான் எவருக்கும் எண்ணத்தில் சுத்தமில்லை
நம்பிவாழ நீதமில்லை
தம்பியாரும் அண்ணனில்லை.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment