மனமே நீ என்னை...........!
மனமேநீ என்னை மயக்காதே!-உன்
குணம்நான் அறிவேன் குழப்பாதே!
ஆளும் தலைவன் நானேதான்-மனமே
அடிமைக்கு இல்லை அதிகாரம்.
மனம்போல் பிழைப்பவன் வீழ்கிறான்-கேடு
மறுக்கத் துணிபவன் வாழ்கிறான்.
ஐம்படைப் போரே தகர்த்தாலூம் !--மனமே
ஆன்மா நேரே ஜெகத்தாளும்!
நரகமும் சொர்க்கமும் எங்குண்டு?--எண்ணம்
பழகும் விதத்தில் அங்குண்டு.
அருத்தம் பொருத்தம் சமமுண்டு.--மனமே!
தெரிவாய் புரிவாய் சுகமுண்டு.
கொடுக்கலும் வாங்கலும் நேரென்றால்--விட்டுக்
கொடுத்துப் பெறுதல் சமங்கண்டால்
கூடும் உறவில் தடையோ!-மனமே!
நரகமும் சொர்க்கமும் எங்குண்டு?--எண்ணம்
பழகும் விதத்தில் அங்குண்டு.
அருத்தம் பொருத்தம் சமமுண்டு.--மனமே!
தெரிவாய் புரிவாய் சுகமுண்டு.
கொடுக்கலும் வாங்கலும் நேரென்றால்--விட்டுக்
கொடுத்துப் பெறுதல் சமங்கண்டால்
கூடும் உறவில் தடையோ!-மனமே!
தேடும் சுவர்க்கம் நிசமே!
சந்தேக நஞ்சும் பொல்லாதே-நெஞ்சம்
கொண்டாடும் வஞ்சம் கொல்லாதோ!
துன்பம் துயரம் தானன்றோ-மனமே!
சண்டாளம் நீயே நரகமோ!
தவப்படும் நெஞ்சம் நெறிப்படும்-எண்ணம்
அலைபடும் என்றால் தெறிப்படும்.
வசப்படும் சிந்தை அகப்ப்படும்-மனமே!
இசைப்படும் ஒன்றால் தகப்படும்.
துலங்கும் அனுபவம் புத்தியும்-ஆன்மா
விளங்க அறிவது சித்தியும்.
விலங்கு குணமும் விலகிட--மனமே!
விலங்கிடு சினமே நலந்தொட!
கொ.பெ.பி.அய்யா.
சந்தேக நஞ்சும் பொல்லாதே-நெஞ்சம்
கொண்டாடும் வஞ்சம் கொல்லாதோ!
துன்பம் துயரம் தானன்றோ-மனமே!
சண்டாளம் நீயே நரகமோ!
தவப்படும் நெஞ்சம் நெறிப்படும்-எண்ணம்
அலைபடும் என்றால் தெறிப்படும்.
வசப்படும் சிந்தை அகப்ப்படும்-மனமே!
இசைப்படும் ஒன்றால் தகப்படும்.
துலங்கும் அனுபவம் புத்தியும்-ஆன்மா
விளங்க அறிவது சித்தியும்.
விலங்கு குணமும் விலகிட--மனமே!
விலங்கிடு சினமே நலந்தொட!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment