Wednesday, 11 November 2015

காத்துக் கிடப்போம்

யாமேன் காத்துக்கிடப்போம்!

காத்துக் கிடப்போமோ!
காசுகவி செய்வோமோ !
அகங்கொண்டால் ஏற்றுக்கொள்!
திகட்டினால் விட்டுவிடு!

அழைத்தால் நுழைகிறோம்
அடைத்தால் கலைகிறோம்.
எமக்கில்லை நட்டம்!
உமக்குத்தான் கட்டம்!

வேலையென்றா எண்ணுகிறோம்!
யாரைக்கொண்டு வாழுகிறோம்?
உழுதுவிதை ஊன்றத்தான்
எழுதுகடன் ஆற்றுகிறோம்..

வந்ததும் எழுதத்தான்
தந்ததும் எழுத்தாணிதான்.
எந்தநாள் அவனறிவான்.
அந்தநாள் அடையத்தான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment