தந்தை விந்துப் பூச்சியே
தாய்வயிற்றுப் பிள்ளையே.
கண்ணை மூடிப் பிறந்ததும்
மண்ணைக் கண்டு அழுததும்
அன்னை அமிர்தம் பீச்சியதும்
பிள்ளைப்பசி தணிந்ததும்- தாய் மடியும் அயர்ந்தது.
தானே தன்னைப் பிணி நோக
ஆனாள் அன்னை வரமாக.
அன்னக் கையில் பிள்ளை ஆயை.
அள்ளியதும் பாக்யமோ-சுமந்த
முன்னூறு நாள் இன்பமோ!
தந்தை அவன் நெஞ்சிலே;
சிந்தி சிரித்த சிறுநீரே!
வாயில் மெல்ல ருசிக்கவே
பேய்தானோ பிள்ளையே-அந்த
தாய் தந்த சொந்தமோ! தக்க
அப்படி எல்லாம் வளர்த்த பிள்ளை-இப்போ
அப்பன் ஆத்தா ஏனோ தொல்லை!
நன்றி கூட எண்ண வேண்டாமே.
நாய்க்கு மட்டும் உண்டானது-
ஒரு
நாய் வளர்த்தால் மேலானது
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment