Friday, 13 December 2024

புன்னகை!காவிரி!

பொன்னிறம் விஞ்சுமோ உன்மேனி  அதிசயம்!
பொன்னகை அஞ்ச என்னதான் இரகசியம்!
மின்னும் புன்னகை 
கண்ணும் கூசும்.
மின்னலும் கூட 
சமரசம் பேசும்.

எத்தனை பொன்னகை எடை;
எனைச் செய்யும் வீண் தடை!
கரிகாலன் கட்டிய கல்லணை;
தாங்குமோ கவிஞன் கற்பனை!
பொங்கும் புனலாய் புன்னகை,
எங்கும் ஒளிரும் மின்னலை;
தங்கும் பூவிரி சொந்தமோ!
இங்கும் காவிரி வந்தாளோ!

மீறி வந்தாள் காவேரி .
ஆறி நின்றாள் பூவாரி.
அமிழ்தம் மொழிகிற பாமாரி. 
தமிழாய் வளர்ந்தாள் தேனூறி.
தாயவள் சக்தி சீர்வரிசை
தந்தாள் தன்வழி சோலையாம் பரிசை.
புன்னகை செய்யும் பூம் பொழில் வா!வா!
கண்முன்னே காணும் காட்சி எழில் தா! தா!

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment