பொன்னகை அஞ்ச என்னதான் இரகசியம்!
மின்னும் புன்னகை
கண்ணும் கூசும்.
மின்னலும் கூட
சமரசம் பேசும்.
எத்தனை பொன்னகை எடை;
எனைச் செய்யும் வீண் தடை!
கரிகாலன் கட்டிய கல்லணை;
தாங்குமோ கவிஞன் கற்பனை!
பொங்கும் புனலாய் புன்னகை,
எங்கும் ஒளிரும் மின்னலை;
தங்கும் பூவிரி சொந்தமோ!
இங்கும் காவிரி வந்தாளோ!
மீறி வந்தாள் காவேரி .
ஆறி நின்றாள் பூவாரி.
அமிழ்தம் மொழிகிற பாமாரி.
தமிழாய் வளர்ந்தாள் தேனூறி.
தாயவள் சக்தி சீர்வரிசை
தந்தாள் தன்வழி சோலையாம் பரிசை.
புன்னகை செய்யும் பூம் பொழில் வா!வா!
கண்முன்னே காணும் காட்சி எழில் தா! தா!
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment