Sunday, 15 December 2024

உன்னை நம்பு.

விண்ணை நம்பு காலம் விடியும்.
உன்னை நம்பு யாவும் முடியும்.
மண்ணை நம்பு மடிகள் நிறையும்.
கண்ணை நம்பு கனவுகள் விரியும்.

உன்னை அறிய உள்ளம் ஒன்று.
தன்னை உணர இல்லம் உண்டு.
எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்டு
உன்னை உயர்த்த வழியதைத்
தேடு.

கொட்டிக் கிடக்கிறது வாய்ப்புக்கள் கோடி.
எட்டி நிற்பதால் கிட்டே வராது.
தொட்டுப் பறிக்காமல் தேவை தீராது.
விட்டு வெளிவா விண்ணும்
எட்டும்.

கையும் காலும் மெய்யும் கருவிகள்.
செய்யும் தொழிலுக்கு வேறென்ன உதவிகள்!
பொய்யும் புறட்டும் இல்லாத நேர்மை,
வைய்யம் வெல்லவும் சீவிய கூர்மை.

கொ.பெ.பிச்சையா.






No comments:

Post a Comment