Tuesday, 31 December 2024

தாயும் சேயும்.

வாயும் வயிறு மாக தாயும் சேயுமாக
தாயே வயிற்றுள் சேயாகினாள்
சேயின் வாயே தானாகினாள்.
சேய்க்கு மருந்து தாயுண்டாள் 
தாயே சேயாய் தானாகினாள்.
சேயுந் தாயும் ஆரோக்யம் தாயவள் கொண்ட சீராக்யம்.
தூக்கம் என்பது தாய்க்கும்
ஆக்கம் அதுபோல் சேய்க்கும்
நோக்கம்  ஒன்றே சேயிலே.
தூக்கத்தில் தானே கண்விழிப்பாள். 
தனக்குள் சேயே சிந்தனை.
அக்கம் பக்கம் அரணாக 
தாயே தானே அவளாக.

கொ.பெ.பிச்சையா.



No comments:

Post a Comment