வலியவன் அதனை வளைத்துக் கொண்டான்.
ஆள்பலம் உள்ளவன்
ஆக்கிர மித்தான்
நாள்பட அவனே
நிலக் கிழார் ஆனான்.
பூமி எவனுக்கும் பூர்வீகம்
இல்லை
உரிமை கொண்டவன்
உடமை கொண்டான்.
பழங்காய் உண்டே
பிழைக்கத் தெரிந்தவன்
உழைத்திடக் கற்றே
வளைத்தான் சொத்தே
தன்னிலம் என்றே
எல்லைகள் வகுத்தான்.
தமக்குள் உரிமை
ஊராய் தொகுத்தான்
காசை அறியாக் காலம் அதிலே
ஓசி என்றறியா உடமைகள் சேர்த்தான்
ஆசைக்கு அல்ல தேவைக்கு
உழைத்தான்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment