Monday, 30 December 2024

தைகூடும் திருவிழா

ஜல்லிக்கட்டு

கூடிய கூட்டம் என்ன ஆடிப்போன கோலமே!
வாடி வாசல் திறக்க இன்னும் நேரம் கொஞ்சம் ஆகுமே!
பாய்ந்து வரும் காளைகளை பார்க்கும் அந்தக் காலமே,
ஆய்ந்திடலாம் அலப்பறைகள்
அதற்கேற்ப களப்பறைகள்.

சீறி வரும் காளைகளின் கூரியநல் கொம்புகள்,
வாரிவிட வந்துவிழும் வாலிபங்கள் அம்புகள்.
அத்தனையும் தட்டிவிட்டு
கெத்தாக விடை கூறும்
வெற்றிக்  காளைக் கம்பீரம்
சுற்றி வரும் சிங்காரம்.

வாடி வாசல் திறக்கட்டும்
தேதி என்ன தெரியட்டும்.
வீர கோசம் ஜல்லிக் கட்டும்
தீர வாசம் திமிரு கொட்டும்.
தமிழன் எனும் அடையாளம்
சிமிழ் பிடிக்கும் விதமாகும்.
கமழும் மணம் காளைகள்
தமிழ் சூடும் வாகைகள்.

தமிழ் பாடும் பெருவிழா
தைகூடும் திருவிழா.
செய் வாகை வேளாண்மை
வைபோக ஆளாண்மை.
முதன்மைத் தொழில் விவசாயம்,
இதன்மை எழில் அவசியம்.
விளை நிலப் பெருந்தனம்.
உழவுக்கு வந்தனம்.

கொ.பெ.பிச்சையா.




No comments:

Post a Comment