சாமிக் கெல்லாம் சாமி நீ!
சண்முகா முருகன் நீ!
பூமி க்கெல்லாம் சாமி நீ!
பூலோகக் காவேலன் நீ!
தமிழுக்குத் தந்தை நீ!
தரணிக்குக் கந்தன் நீ!
தந்தைக்கு மந்திரம் நீ!
இந்திரன் மருமகன் நீ!
பிரம்மனுக்கு அதிகாரி நீ!
சிறை வைத்த சிறுவன் நீ!
படைக்கும் தொழில் துணிந்த நீ!
படை ஆறு தலைவன் நீ!
குறவள்ளி மணந்த நீ!
குலசமம் புனைந்த நீ!
வேடனாய் விருத்தன் நீ!
வரம் தந்த வள்ளல் நீ!
காக்கக் காக்கக் காவலன் நீ!
கந்த சஷ்டி சேவலன் நீ!
போர்க் குண வேலவன் நீ!
மூர்க்கன் சிரம் காலவன் நீ!
மயி லேறும் வாகனன் நீ!
துயில் தீரும் துறவறன் நீ!
ஒளவைக்கு ஆசான் நீ!
ஔடதமாய் பூசான் நீ!
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment