மனுசங் கெட்டுப் போனதுதான்
நிசத்தில் நிசமுங்க.
குடும்பத்தையே மறந்துப்புட்டு
குடிச்சிப் பழகிட்டான்- தினமுங்
குடிக்க் கிடைச்சாப் போதுமுண்ணு
கோட்டியாகிட்டான்.
வேலை வெட்டி இல்லாத காலிகள் ஆக
வீதிகளில் திரிகின்ற ஜாலிகள் ஆக
தலைமுடிய பாதிவிட்டு பாதி வெட்டி-புதுசு
கிழிச்ச டவுசர் நாகரிகம் கேவலம் ஆச்சு.
பதினாறு முழச் சேலை கட்டி அழகு ரதமாய்,
பார்ப்பவர் கண்களுக்கு
பார்வதி அம்சமாய்,
தேவதைகள் நேரில் வரும் பாவையர் காட்சிகள்-இன்று
ஆம்பளயா பொம்பளயா அறிய
முடியல.
நைட்டி உடை கண்டு பிடிச்ச நாச காலனை.
கண்டு பிடிச்சி கொண்டு வந்தால் காப்பு மாட்டலாம்.
நைட்டு நேர வசதிக்கது நல்ல ஆடைதான்-அய்யய்யோ
பகலில் மாட்டி வந்தாத்தான் பயமா இருக்கு.
அப்பன் ஆத்தா சொல்லுக் கில்லை மரியாதையே.
தப்புத் தப்பா மாறினாத்தான்
நாகரிகமா?
காலேஜுக்குப் போறதென்ன படிக்கத்தானா-இல்ல
கண்ட்ராவி கலாச்சாரம் கொண்டு வரவா?
வீட்டைவிட்டு வெளியே போக வெறுப்பாகுது.
காட்டு வாழ்க்கை திரும்பு தோண்ணு கவலையாகுது.
முந்தி வந்த மூத்த தமிழ்
அந்த நாகரிகம் -உயர்
செம்மொழிச் சிறப்பும் மெல்ல
சீர் அழியுதா?
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment