அழுது தொழுது கெஞ்சியாச்சு-அவர்
செவிகள் ஏனோ செவிடாச்சு.
பெற்ற சொந்தப் பிள்ளைக்கே
பேரு வைக்கிறான் வேறெவனோ!
விளைய வச்ச பொருளுக்கு-விவசாயி
விலையும் வைக்க முடியல.
உலகத்திற்கே சோறு போடும்
உழவன் வீடு கூரை ஓடு
உழவன் நாடுணு பெருமையாம் -ஏழை
உழவன் பாடு சிறுமையாம்.
எவனெவனுக்கோ ஓய்வூதியம் எதெதுக்கோ விருதாதிக்கம்.
விவசாயத்திலும் சாதித்தோர் அவசியமே இல்லையா?
உழைச்சுக் களைச்ச விவசாயி-சுருண்டு
ஓலைப் பாயில் கிடக்கிறான்.
அழைச்சி அவனை ஊக்கஞ் செஞ்சி
ஆதரிப்பார் யாருண்டோ!
பாடு பட்டும் பலனில்லை.
பட்ட கடன் தீரவில்லை.
உழவனுக்கு என்ன மிச்சம் -கிழிஞ்ச
கோமணந்தான் கொஞ்சம் மிச்சம்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment