Thursday, 12 December 2024

பொய்யென்ன! மெய்யென்ன!

பொய்யென்ன? மெய்யென்ன!
பொதுவாழ்வில் பேதமில்லை.
புற வாழ்வே பொது வாழ்வு,
மறதியவர் மறு வாழ்வு.
மேடைப் பேச்சு பேசியாச்சு
மேடையோடு போயே போச்சு
வெளியில் வந்தால் திட்டுவார்
உள்ளே போனால் ஒட்டுவார்.
சத்தியம் என்ப தெல்லாம்
சமரசக் கொள்கை யாச்சு.
நித்தியம் நிறம் மாறும்,
நிச்சயம் இடம் கூறும்.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment