மனிதன்.
மனமெனும் அறிவை
மனதன் பெற்றதால்
மனிதன் ஆகினான்.
குணமெனும் நிறைவை
கூடுதல் பெற்றதால்
கனவான் ஆகினான்.
அழுகையும் சிரிப்பும் மனிதனின் சிறப்பு.
துன்பம் இன்பம் வெளிப்படும் குறிப்பு,
அன்பும் வெறுப்பும் அவற்றுள்
பிறப்பு,
என்பன எல்லாம் உணர்வெனும் பொறுப்பு.
உணர்வின் மொழியது உள்ளுள் உணர்வது,
நினைவின் வழியது நெஞ்சம் மொழிவது.
கோபதாபம் இரக்க மெல்லாம்
தூபம் போலது தூண்டலாகும்.
துடிப்பும் நடிப்பும் துலங்கும்
வெடிப்பு,
துறப்பும் பொறுப்பும் விளங்கும் பிணைப்பு.
அறிவும் உணர்வும் ஆண்டவன் கொடுத்தது.
மனிதன் என்பவன் மனிதனாய் வாழ்வது.
தீபம் போலொளி தியானம்
முயன்றால்,
மனிதம் மலர்ந்து புனிதமாகும்,
யோகம் அதுதான் இறை ஞானம்.
இறை நிலை அடைவது மெஞ்ஞானம்
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment