Tuesday, 31 December 2024

நிலையில்லா வாழ்க்கை.

தாமரை இலைமேல்
தண்ணீரைப் போலே
பூமியில் வாழ்க்கை  நிலை இல்லை.
தாம்நிரை வாழ்ந்தோம்
என்பதும்-எல்லை
கண்டார் எவரும்  இல்லை.

வந்தது முடித்தா ரென்று
வாழ்ந்தாரும் இல்லை.
எதற்காக வந்தோமென்று
அதற்கென்ன செய்தோ மில்லை.
கொண்டது சொந்த மென்று
கொண்டாரும் இல்லை.
எப்படி வந்தோமோ 
அப்படித்தான் செல்வோம்.

No comments:

Post a Comment