படிச்சாத் தான் வாழ்வு.
பசிச்சாத் தான் வயிறு
புசிச்சாத் தான் உயிரு.
சேர்க்காத சொத்து ஏற்காத முத்து.
பார்க்காத நஞ்சை பழகாத புஞ்சை.
வேர்க்காத வேலை கோர்க்காத மாலை.
ஏர் செய்யா நாளை ஊர் மொய்யா பாலை.
விளையும் நிலத்தை தலையெனக் காப்போம்.
அலையும் மனத்தை நிலையென வைப்போம்.
விவசாயம் அல்லாத அவசியம்
வேறென்ன உலகினில் இரகசியம்.
விவசாயம் அல்லாது வேறென்னவொ!
தவசம் செய்யுமோ தரணியில் அவசியம்!
வீடென்ன செய்யும் சோத்துக்கு!
நாடென்னும் செய்யும் வாழ்வுக்கு?
காடெல்லாம் வீடானால்
வாழ்வென்னாகும் நாளைக்கு?
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment