கோலம் புரியல.
காலம் மாறும் வேகம் முன்னம்
நாளும் போலல்ல.
புதுக்கணக்கு ஆண்டவனும்
போடப் போறானோ!
அதுக்கு என்ன விஞ்ஞானம்
பதிலைச் சொல்லுமோ!
நாகரிகம் முத்திப் போச்சு
நடக்க வழியில்லே.
வாகனங்கள் அழிக்கும் காத்து
வானமே இல்லே.
ஆகாயமே சூடேறி அவிஞ்சு
கிடக்குது.
சுழலும் பூமி வேகம் சோர்ந்து
பருவம் மாறுது.
வெய்யில் கொளுத்தும் காலத்திலே மழையக் கொட்டுது.
மழை வெளுக்கும் நாளையிலே வெயில் வாட்டுது.
காலம் மாறி பருவம் மாறி கோலம் மாறுது.
மூலம் என்ன முடிவுக்குத்தான்
நாளும் ஊருது.
காஞ்சி கெடுக்குது இல்லேனா பேஞ்சி கெடுக்குது.
ஓஞ்சி போன விவசாயம் ஊர முடுக்குது.
பஞ்சம் வந்து பட்டினியில் பட்ட உலகிலே
மிஞ்சும் மண்ணில் எஞ்சுவது
மழையும் வெயிலுமோ!
நல்லதுக்கு காலமில்ல சொல்ல முடியல.
உள்ளதுக்கும் நாயமில்ல
வல்லான் வாழுறான்.
ஜனநாயகம் தோத்துக் கிடக்குது
பணநாயகம் கூத்து நடக்குது
அனந்தன் பிறந்து வரவேணும்
அவதார புருஷனாக.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment