இல்லை என்று ஆனபின்னே வனவாசமே.
பெரியவரை மதிக்கச் சொல்லி வளர்க்கவில்லையோ-இன்று
பெற்றவர்கள் தெருவில் வந்து கிடக்கும் நிலையோ!
படிக்க வைத்து பதவி பெறச்
செய்த தந்தையை
பணம்பொருள் கைநிறைய வந்த திமிரால்
முட்டாள் என்றும் பட்டம் தந்து
வெளியில் தள்ளியே-நன்றி
பட்ட கடன் தீர்ப்பதிதோ பிள்ளை எதற்கோ!
தகப்பனவன் கண்டிப்பு இல்லை என்றாலே.
தாய்ப்பாசம் தவறுகளை கண்டு கொள்ளாது.
பயம் கெட்டு நயம் கெட்டு
குணங் கெட்டுமே-இரத்தப்
பாசமான பெற்றோரை
துறத்தி ஓட்டுமே.
கோவில் மாடாய் பிள்ளைகளை
விட்டு விடாதீர்.
பாவ புண்ணியம் என்ன என்றும்
பழக்கி வருத்துவீர்.
ஆசார ஒழுக்கங்களை
அறியச் சொய்யுவீர்-வாழ்க்கை
அதுவென்றே பண்பட்டு வாழச்செய்யுவீர்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment