தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தமிழ்நாடே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் தாயே வாழ்க!
பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவம் சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் தமிழே வாழ்க!
காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!
வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் செம்மொழி வாழ்க!
மேற்கும் கிழக்கும் மலைத்தொடர்க் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் எழிலே வாழ்க!
இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும்
மேவிய செந்தமிழ் புகழே வாழ்க!
கவிஞர் கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment