வாழ்க்கைக் கணக்கு.
நல்லோர் சேர்க்கை கூட்டிக் கோ!
தீயோர் உறவைக் கழித் துக்கோ!
அறிவை நாளும் பெருக்கிக் கோ!
நேரத்தை நலமாய் வகுத்துக் கோ!
இன்ப துன்பங்கள் சமமாக்கு.
இதுதான் வாழ்க்கை அமைச்சுக் கோ!
பழக்கத்தைப் பொறுத்தே பண்பாடு.
பாதையும் அப்படி நிலைப்பாடு.
பூவைப் பொறுத்தே மணம் நாறும்.
பழக்கத்தின் வழியே குணம் மாறும்.
பழக்க தோசமே இனங் கூறும்.
நல்லதும் தீயதும் மனம் போலும்.
வாழ்வந் தாழ்வும் இரு பாகம்.
பகலும் இருளும் சம பாகம்.
அறிவே வாழ்க்கையில் ஒளியாகும்.
அறிவைப் பெருக்க வளம் பெருக்கும்.
நேரத்தை நலமாய் வகுத்திட்டால்
தேரும் புகழது தீர்வாகும்.
வாழ்க்கை என்பது வாய்ப் பாடு
கூட்டல் கழித்தல் பெருக்கி வகுத்தல்
வாழ்வுந் தாழ்வும் நேர்பாடு.
வாழ்க்கைக் கணக்குத் தீர்வோடு
இன்பமும் துன்பமும் சமம் பாடு
இறைவன் தீர்ப்பான் கணக்கோடு.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment