வாய்ப்பு வாய்க்கும் ஒரு முறை
வருந் தருணமும் ஒரு முறை
போனால் திரும்ப வாராது
ஆனால் அதுவே உனக்கான நேரம்.
தானாத் தானே அழைக்கும்
வீணாப் போனாத் தொலைக்கும்.
யோகம் இருந்தால் திரும்பும்
ஆகுமென்றால் மறுமுறை விரும்பும்.
வாய்ப்பு என்பது மழையது போல
ஏய்க்கும் பலமுறை பேய்வது போல
அதனால் மெத்தனம் கூடாது வீழ
எதனால் என்பதை யோசிக்க ஆழ.
தருணம் அது கணப்பொழுதுச் சலனம்
திரும்பாத சகுனம் அழுதென்ன பலனும்
மடியில் விழ நொடியில் தவறக் கரணம்
விடியல் முடிந்தும் தொடராது சரணம்.
வாய்க்கும் வாய்ப்பு ஒரு முறை
வாய்த்தது அதனை பற்றி அடை
வரவை விட்டு வருகைக்குக் காத்திராதே
இறைவன் ஆணை இதுவென விடாதே.
கவிஞர்.கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment