தமிழைப் பிழைக்காதே!
உழைப்பில் வாழ்தல் பாவம்.
பிழைத்துப் பேசுந் தமிழில் --பிற
மொழிக் கலப்பென்ன இலாபம்
தாய்மொழி தவிர்த்தல் பாவம்--பேசி
பிறமொழி இழித்தலும் நோகும்.
தாயை மதிப்பது யோகம்--அதுபோல்
தாய்மொழிக் காப்பதும் தாகம்.
தாய்மொழி கழிப்பது வேசம் --பெற்ற
தாயை இழிப்பதும் மோசம்
பிறமொழி கலந்து பேசி--தனது
பிறப்பை இழிப்பாள் தாசி.
தூய்மைப் பாசம் தாய்மை--தாய்
வாய்மொழி மணக்கும் மேன்மை,
நோய்மைப் பிறமொழி வாசம்--ஈன்ற
தாய்மை மறக்கும் நாசம்.
அம்மா என்ற சொல்லில்---உயிர்
ஆன்மா உயிர்க்கும் உள்ளில்.
சும்மாப் பிறமொழி மோகம்--வீண்
சுமையாய் சுமக்கும் ரோகம்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment