Tuesday, 18 November 2025

செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதல் ஒலியாம், 'அம்மா '
வளர் மொழியாம் செம்மை
வாய்த்தயிரு, 
கண்ணாம், கருவிழியாம், 
தமிழே வாழி!
கன்னல் இனிமை, வளமை, 
நாளும் இளமை, 
தமிழே வாழி!

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலி
பிறக்கும் உறவு அம்மாவாம். 
சிறப்பிதுபோல் உண்டோ!
பிறமொழி ஏதும் சொல்வீரோ!
உறியது செம்மொழி 
தமிழே வாழி!.

அறம்பொரு ளின்பம் 
அதன்பின் பெறும்பேறும்,
திருக்குறள் பொதுமறை 
ஞாலப் பெருமை 
தமிழே வாழி!
அனைத்தும் திறமாய்,
அமைந்தும் வளமாய் 
அவனியில் வாழும் 
அருமைத் தமிழே வாழி!

பன்மொழி ஏற்றுப் 
பதித்த இலக்கியங்கள், 
வண்பொலி வேற்றி 
வளர்ந்துமே 
தன்னிலைத் திண்ணமும் 
தேறியும் முன்னிலைப் 
போற்றியும் செந்தமிழ் 
வாழி வழுத்து!
வாழி!வாழி!வாழிய 
செந்தமிழே வாழி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment