தம்பி பாலாநீ தரமத்தாய் பிள்ளை நீ!
அம்பி போலநீ அக்கரை சேர்வள்ளம் நீ!
நம்பி முயன்றோர்கு நல்கும் வள்ளல் நீ!
எம்பி என்போர்கு உள்ளம்வாழ் செல்வம்நீ!
அழைப்பவசர ஊர்தி நீ ஆதரவுக் காவலன்நீ!
தொலைதூர மக்களின் மலைப்புறச் சேவகன்நீ!
நிலைகுலைந்த கலைஞர்களின் நலம்தந்த நாயகன்நீ!
உலையேறா இல்லங்களில் இலைபோட்ட அன்னவன்நீ,!
இருப்போன் அல்லான்நீ இருப்பதைக் கொடுப்போன்நீ!
பிறப்பால் கரணன்நீ சிறப்பால் வர்ணன்நீ"
மனமுள்ள மனிதன்நீ குணமுள்ள பாரிநீ!
இனமான மனிதம்நீ தனமான தானன்நீ!
குலம்போற்றும் உரியன்நீ!விளம்பிடாப் பிரியன்நீ
நலம் விளையும் விருச்சம்நீ! குலங்காக்கும் மருத்துவம்நீ!
அறஞ்செய் தர்மன்நீ கரம்பெய் நண்பன்நீ!
புறம்பேசும் பொய்யர்கும் சிரங்காக்கும் சீராளன்நீ!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment