Wednesday, 5 November 2025

ஒற்றையடிப் பாதை.

ஒற்றையடிப் பாதை.

ஒற்றை யடிப் பாதை வழி
மெல்ல மெல்லப் பார்த்து நட
முந்தப் பார்கும் முன்னாலே--கேடு
தள்ளப் பார்க்கும் பின்னாலே.

கூப்பிடாமக் கூட வரும்
கோபப்படத் தூண்டி விடும்
அவசரத்தில் ஆசை ஊட்டி --கேடு
ஆழ் குழியில் தள்ளி விடும்.

கேடுகெட்டக் கெட்ட நேரம்
தேடிவந்து ஒட்ட வரும்.
பாடு பட்டுச் சேர்த்ததெல்லாம்--கேடு
ஓடவிடும் உன்னை விட்டும்.

தன்பேச்சைக் கேளாமல்
தன் முயற்சி நம்பாமல்
மனம்மயக்கி மாற்று வழி--கேடு
வனம் விலக்கித் தொலைத்திடும்.

தேவையற்ற பழக்க தோசம்.
தீயவர்கள் சக வாசம்
குறுக்குவழி மோக மோசம்--கேடு
உருவாக்கும் தன்னீசம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment