தங்கம் தாரகை நாணுதே!
தங்கம் தாரகை நாணுதே!
திங்கள் எழுந்திடத் தயங்குதே!
எங்கும் ஒளிமயம் விளங்குதே!
பொழுது புலருதோ! மலருதோ!
நிழல் வளருதோ! நீளுதோ!
வழி தெரியுதோ! புரியுதோ!
விழி !பேசுதோ! கூசுதோ!
அதி காலைப் பொழுதென அகவுதோ!
புது வேளை நாளெனக் கூவுதோ!
விடியல் தானென வாசல் திறந்ததோ!
வீதிகள் கோலங்கள் நிறைந்ததோ!
காலங் காட்டி நேரம் மறந்ததோ!
கோலம் பார்த்து ஓரம் மறைந்ததோ!
நாளும் இதுபோல் இல்லையே!
யாவும கடந்தது எல்லையே.!
இதுவவென்ன நிகழ்ந்தது அதிசயம்..
எதுவெனக் கசிந்தது இரகசியம்.
புதுப்பெண் ஒருத்தி வரவுதான்.
அதுவெனப் புகழ்ந்தது தரவுதான்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment