மனிதன் எங்கே வாழ்கிறான்
மனிதனைத் தேடி அலைகிறேன்.
மனிதன் போன்ற படைப்புக்களில்
மனதனைத் தொலைத்தே தேடுகிறேன்.
மனிதன் என்ற அடையாளம்
மறந்து தொலைத்தான் இறைவனோ!
மனிதர் போன்ற படைப்புக்களில்
மனதை மறந்து விட்டு விட்டான்
மனிதரில் மனிதனைத் தேடுகிறேன்
இனம் தெரியாமல் வாடுகிறேன்.
ஆறறி வொன்றில் ஓரறிவை
தூரறிவாகத் துடைத்து விட்டான்.
மனதே இல்லா ஓருருவை
மனதன் என்றும் நம்புவதோ!
மனமும் குணமும் இருந்தவரை
மனிதன் என்றே வாழ்ந்திருந்தான்.
அன்பும் கருணையும் இரக்கமும்
பண்பும் பழக்கமும் அடையாளம்.
எலும்பும் தோலும் போர்த்தியதால்
உலவும் ஓரினம் மனிதமாமோ!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment