வெறி கொண்டு முன்னேறு.
நெறி கண்டு உன்னோடு.
இலக் கொன்று வைத்துக்கொள்.
இலட்சியம் நோக்கிச் செல்.
அவலங்கள் அவமானங்கள்
அதுதான் வழிகாட்டிகள்.
சபலங்களைக் கடந்து செல்
சன்மானங்கள் தூரமில்லை.
அக்கம் பக்கம் திரும்பாதே
அது உன்னைத் திசைமாற்றும்.
சக்கரங்கள் கால்கள் சுழற்று
நிற்பதற்கு நேரமில்லை.
நோகாமல் நுங்கில்லை
வேகாமல் சோறில்லை
நிழல் தேட முயலாதே
உழைப்புக்குத் தோல்வியில்லை.
வெற்றியாளர் வரலாறு
கற்றுநீக் கரையேறு
வெற்றுக் கதைப் பேசாதே
பற்றியதை விட்டிடாதே.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment