Tuesday, 18 November 2025

செல்லக் குழந்தைகளே!

பாப்பாப் பாட்டு.

செல்லக் குழந்தைகளே
வெல்லக் கட்டிகளே!,
நல்லப் பேரெடுத்து
நாளைவழி நடத்துவீர்!

காந்தித்
தாதாப் போல உண்மை 
கட்டாயம் பேச வேணும்--நீ
சாந்தமாக அவர்போல 
சரித்திரம் படைக்க வேணும்.
அகிம்சை யெனும் ஆயுதமே--பொது
அறப்போர்கு கொள்ள வேணும்.

பாட்டெழுதிப் பாரதி போல்
பாரதத்தை மீட்டது போல்--உலக
நாட்டு மக்கள் நலம் வாழ
நலம்பாடிக் காட்ட வேணும்.
படைக்கப் பட்ட அத்தனையும்--சொந்த
உடைமை போல் காக்க வேணும்.

உரிமைக் காகப் போராடி
உயிர் நீத்த  உத்தமர்கள்--நமக்குப்
பெற்றுத் தந்த சுதந்திரத்தை
பேணி நன்றுக் காக்க வேணும்.
சனநாயகம் உயிர் மூச்சை--பாரில்
சமூகத்தில் போற்ற வேணும்.

வீடுகளே நாடுகளாம்
நாடுகளே மாநிலங்கள்---ஒன்றிய
உலகமே மைய்யமாக
ஓராட்சி ஆளவேணும்
மக்கள் ஒன்றுகூடி--- அமைதியில்
ஓரணியாய் வாழவேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment