பாப்பாப் பாட்டு.
வெல்லக் கட்டிகளே!,
நல்லப் பேரெடுத்து
நாளைவழி நடத்துவீர்!
காந்தித்
தாதாப் போல உண்மை
கட்டாயம் பேச வேணும்--நீ
சாந்தமாக அவர்போல
சரித்திரம் படைக்க வேணும்.
அகிம்சை யெனும் ஆயுதமே--பொது
அறப்போர்கு கொள்ள வேணும்.
பாட்டெழுதிப் பாரதி போல்
பாரதத்தை மீட்டது போல்--உலக
நாட்டு மக்கள் நலம் வாழ
நலம்பாடிக் காட்ட வேணும்.
படைக்கப் பட்ட அத்தனையும்--சொந்த
உடைமை போல் காக்க வேணும்.
உரிமைக் காகப் போராடி
உயிர் நீத்த உத்தமர்கள்--நமக்குப்
பெற்றுத் தந்த சுதந்திரத்தை
பேணி நன்றுக் காக்க வேணும்.
சனநாயகம் உயிர் மூச்சை--பாரில்
சமூகத்தில் போற்ற வேணும்.
வீடுகளே நாடுகளாம்
நாடுகளே மாநிலங்கள்---ஒன்றிய
உலகமே மைய்யமாக
ஓராட்சி ஆளவேணும்
மக்கள் ஒன்றுகூடி--- அமைதியில்
ஓரணியாய் வாழவேணும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment