வானே காவல் தானேத் துணையாக
மீனே வாழ்வாக கரையே கனவாக
நாளும் பிழைக்கும் மீனவக் கூட்டம்.
ஆளும் அரசுகள் வேணும் நோட்டம்
வேர்வைக் குளியலில் விளைந்த உப்பு
கரைந்து கடலில் நிறைந்தது உவர்ப்பு
கரை சிந்தும் கண்ணீர் கடலில் கலப்பு.
தரை வந்தே சுவைப்பர் நந்நீர் இனிப்பு
பார்வை யாவும் வீசிய வலையில்
தீர்வை இறைவனில் தேடும் பிழைப்பில்
வாழ்வைத் தினமும் தொடுகின்ற நிலையில்
வாழும் சமூகம் மீனவர் கனவில்.
நாட்டுக்கு உணவளிக்கப் போருக்குப் போகிறார்.
சீட்டுக்குப் பணமளிக்கக் கடலுக்குள் நோகிறார்.
தனக்கென என்னதான் தன்பாடு தேடுகிறார்.
மனக்குறை நோவுக்கு யாரைத்தான் நாடுகிறார்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment