Friday, 21 November 2025

கரை மேல் காக்க வைத்தான்.

கரை மேல் காக்க வைத்தான்.

தரை மேல் பூக்க வைத்தான்--இறைவன்
கரை மேல் காக்க வைத்தான்--என்னவரை
தண்ணீரில் ஓட விட்டான்--பெண்ணை
கண்ணீரில் கரைய விட்டான் 

கட்டிய கணவர் கடலில் உழைக்கிறார்.
தொட்டில் குழந்தை தூக்கத்தில் விழிக்கிறான்
தட்டில் சோற்றைத் தட்டிக் கழிக்கிறான்
தந்தை எங்கென எட்டி உதைக்கிறான்.

வைகறைக் காலைப் பொய்கரைப் போனவர்
மைபொழு தாகியும் மறுகரைக் காணோம்
சிங்களப் பாவியர் செய்வார் பிணை
வங்கக் காவல் ராமசாமி துணை.

நிச்சயம் ஆழ்கடல் நீளும் எல்லை
இலச்சத் தீவை இழந்ததால் தொல்லை.
இறைவன் படைத்த கடலுக்கும் சண்டை 
உடைவது நாளும் மீனவர் மண்டை.

உலகத்து உறக்கம் கலையவும் இல்லை.
கலகத்தின் கலக்கம் விலகவும் இல்லை
உழைப்பவர் கவலை ஓயவும் இல்லை.
பிழைப்பது எப்படி புரியவும் இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment