சுதந்திரம் என்னாச்சோ ஏதாச்சோ!
அதுக்கான பலனுமே யாருக் காச்சோ!
அரசியல் வாதிக்குத்தான் சுதந்திரமோ!
அப்பாவி சனங்கதான் பாவங்களோ!
பாடுபட்ட உயிரெல்லாம் பாவிங்களோ!
பட்டபலன் அனுபவிக்க யோகமில்லயோ
போராடி மாண்டோர்குப் பேரில்லையோ!
சீரோ சிலையோ சிறப்போ இல்லயோ!
அப்பன் வீட்டுச் சொத்துப் போலவே
அவங்க அவங்க பேரு வைக்குறாங்க.
ஆட்சி மாறி வேற வந்தா அழிக்கிறாங்க
அதை மாத்தி மாத்திச் செய்யுறானுங்க.
விடுதலையே வேண்டாம் இப்போனு
வெள்ளக் கொக்கப் பறக்க விட்டாங்க.
சுதந்திரமே கூடாதுனு தடுத்தவங்கதான்
பதறாம கனிமக் கொள்ளை பன்றாங்க.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment