மம்மி பேசுனா உம்முனு இரு
மனைவி பேசுனா கம்முனு இரு.
குடும் பத்துல குழப்பம் வேண்டாமுனா
இடும்ப னாட்டம் டம்மியா இரு.
அங்கிட்டா இங்கிட்டா எங்கிட்டுச் சாயலாம்.
எங்கிட்டுச் சாஞ்சாலும் உங்கிட்ட வச்சிக்கோ
முதுகுல தலையணை இருத்திக் கட்டிக்கோ.
ஆம்பளயா சமத்தா அழாமப் பாத்துக்கோ.
தாயும் வேணும் தாரமும் வேணும்
தனியா புலம்பவும் தைரியம் வேணும்.
அய்யோ பாவம் ஆம்பள சாபம்
குய்யோ முறையோனு கத்துனாலும் கேவலம்.
நூறு வயசு வாழுற ஆசை
வேறோடு புடுங்கி விட்டெறிஞ் சாச்சு.
இன்னைக்குச் செத்தாலும் சந்தோச
மாச்சு
என்னைக்கும் சாவுறது இன்னையோடு போச்சு.
வீடுனு இருந்தா வாசலும் இருக்கும்.
வாசல் திறந்தா வழியும் பிறக்கும்.
விளையுற பிரச்சனைக்கு விடியலும் கிடைக்கும்
தலையாட்டுந் தந்திரம் தாராளம் செயிக்கும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment