Wednesday, 12 November 2025

உன் வீடப் பாரு!

உன் வீடப் பாரு"

உனக்குனு ஒரு வீடு 
இருக்குனு தெரியுமா?
ஊருல உலகத்துல எவன் 
எப்படினு அலையாத.
ஏனிந்த ஆராய்ச்சி எதற்கிந்த 
வீண் பேச்சு.
அடுத்தவன் வீட்டுல 
மூக்கை நுழைக்கிற எதுக்கு?

வீட்டப் பாரு எங்கெங்கே 
ஓட்டை இருக்குனு பாரு. 
ஊரென்ன பேசுது 
உறவென்ன சொல்லுது கேளு
வீடு வீசுது கேட்கக் கூசுது  
வெளியில என்ன மோப்பம்?
உன்னோட அழுக்கு 
ஊரெல்லாம்  சிரிக்குது பாக்குது.

ஊரான் வீட்ட எட்டி எட்டிப் 
பார்க்குற நாயே நீ!
உன் வீட்டப் பாருடா 
பயலே பேயே நீயே!
அடுத்தவன் மனச 
அழவச்சு ரசிக்கிற உனக்கு.
கெடுத்தவன் கேடுக்கு 
கடவுளின் தீர்ப்பும் இருக்கு.

நினைச்சுப் பாத்தா நெஞ்சம் 
பதறுது கொதிக்குது பாவி
கெடுத்தே திரியும்  வஞ்சகப் பேய்கள்
அலையுதிங்கே சாமி.
பசுத்தோல் போர்த்தி புலிப்போல் 
பாயும் தெரிஞ்சுக்கோ!
பார்த்துப் பழகி பாதை விலகி 
சமத்தா வாழனும் அறிஞ்சுக்கோ

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment