நேரம் நலமே நமிர்ந்து நில்லடாத் தம்பி!
ஊரோடு நீ உறுதிக் கொள்ளடாத் தம்பி!
நேரும் யாவும் உன்வச மாகுந் தம்பி!
யாரும் வரட்டும் வெற்றி உனக்கே தம்பி!
துணிந்து தொடர்ந்து செல்லடாத் தம்பி!
பேரும் புகழாகி வெல்லடாத் தம்பி!
தருணம் நிகழ்வதும் தாராளம் அல்ல
வருணம் போலதும் வருகையும் அல்ல.
எப்போது வருமோ எவரும் அறியார்
அப்போது அதுவுன் கதவைத் தட்டும்
திறந்து பாரு வாய்ப்பதைச் சொல்லும்.
உன்னை நம்பித் தன்னைச் செலுத்து.
முன்னைப் பின்னை யோசனை நிறுத்து.
தருணம் அழைப்பதைத் தவற விடாதே.
கரணம் தப்பிக் காரியங் கெடாதே.
திரும்பாது மீண்டும் இழந்து விடாதே.
காலம் வரையும் கோலம் மாறாது
வாழும் முறையும் நாளும் தீராது.
எண்ணம் மாறி வண்ணம் நேராது
திண்ண மாகினால் எண்ணம் சோரது.
தருணம் இதுதான் மீண்டும் வராது.
கவிஞர். கொ. பெ.பிச்சையா.
No comments:
Post a Comment