குடும்பம் ஒன்னா கூடியிருக்கு,
கொரோனா செஞ்சி கூட்டியிருக்கு.
விடிஞ்சு முடிஞ்சா ஊரடங்கு:
அடைஞ்ச குருவிக பறக்குறதெங்கோ!
அப்பன் ஆத்தா ஆளொரு திசைக்கு,
தப்பிப் பறந்ததும் ஏங்குற குழந்தைக்கு;
ஆயாவே தாயான அவலம் கண்டுதான்
தாயும் தந்தையும் தந்தது கொரோனா.
தாய்ச்சீலை வாசம் தாய்மடித் தொட்டில்
தாயன்பு மொழியில் சேய்பழகும் கட்டில்
இருந்தும் குழந்தை அன்புக்கு ஏங்கும்
வருத்தம் திருத்திய கொரோனாவும் நீங்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment