ஆகாய வானம் சுத்த மாச்சு,
தேகாயம் பூமி குளிர்ந்தும் போச்சு.
கங்கை நீரும் குடிக்க லாச்சு
காற்று மாசும் நீங்கி யாச்சு--இது
கொரோனா செஞ்ச புண்ணியந்தான்:
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.
போராட்டம் கூட்டம் மறந்திரிச்சு,
ஊராட்டம் கூச்சல் குறஞ்சிரிச்சி,
பாதை மேடைகள் கிடைச்சிரிச்சு ,
சாலை நெருக்கடி ஓடுங்கிரிச்சு--இது
கொரனா செஞ்ச புண்ணியந்தான்:
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.
காவல் துறைகள் காக்கும் பேச்சு,
ஏவல் துறைகள் இயங்கும் வீச்சு,
கோவில் ஆயங்கள் அமைதி மூச்சு,
நாவல்போன்ற நடைமுறை காட்சி--இது
கொரனா செஞ்ச புண்ணியந்தான்
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.
கொல்லத்தான் வந்தாயோ கொரனாவே!
நல்லதும் செய்தாயே வரலாறே!
வில்லன் போல்வந்த கொரனாவே!
உள்ளதை உணர்ந்திடச் செய்தாயே!
வாழ்வியல் சொன்ன கொரனாவே--நீ
போய்விடு புரிந்தோம் கொரனாவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment