கொரோனொபோல் கொடுமைகள்
எத்தனையோ கடந்ததுபோல்
இதுவுந்தான் கடந்து போகும்.
கொரோனாவும் மறந்து போகும்-இதுவும்
என்மேல் சத்தியமே.
பழகும்வரை குதிரைகூட,
பகையாளி போலத்தான்.
பழகிவிட்டால் நோயுங்கூட
பழக்கப்பட்ட நாயுதான்-விஞ்ஞானம்
துலக்கிடும் மருந்துந்தான்.
தட்டம்மை போலியோவும்
பட்டொழிந்து போனதுவும்
மருத்துவத்தின் சாதனைபோல்
கொரோனாவும் ஒழிந்ததென-நாளை
சரித்திரம் எழுதிவைக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment