என்னடி பொன்மழை சுகமா?
சொல்லடி எப்படி நலமா?
காலம் முடிக்காத கொரோனாவோ!
நாளும் விடியும் நம்புவோம்.
இயற்கை என்பது இறைவனே!
செயற்கை மிஞ்சாத அறிஞனே!
எதுதான் அவனன்றி ஆகுமோ!
இதுவும் கடந்து போகுமே!
காதலின் வடிவம் உலகமே!
கொரோனா இதையும் அறியுமே!
காதலைக் கொன்றும் சாதிக்குமோ!
கொரோனா என்ன போதிக்குமோ!
இயற்கை அதனை மதிப்போமே!
இறைவன் அதுவே துதிப்போமே!
தனிமை ஆயுதம் வல்லமை,
துணையாம் அதுவே வெல்லுமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment