Wednesday, 15 April 2020

மனுசனை மனுசன்......

மனுசன மனுசன் ஒழிக்கிற நாளும் -ஒரு
தினுசாய் வந்ததும் கலி காலம்-அவன்
கொரோ னாவாக தானே மாறும்-இந்த
மருமம் புரிஞ்சா தீரும்-இந்த
உலகப் போரும் ஓயும்-மூன்றம்
உலகப் போரும் ஆறும்.

ஆயுதம் வேண்டாம் அணுகுண்டும் வேண்டாம்;
சாயும் மனிதக் கூட்டம்.
மேயும் கொரோனா மெல்லக் கொல்லும்
தீயும் உலக ஆட்டம்.
உடலால் விலகு உள்ளத்தால் பழகு
உயிர்கள் தாங்கும் உலகு.

அரசு சொல்லும் பேச்சைக் கேளு
வருசங்கள் பலவும் வாழலாம்.
புருசன் மனைவி புள்ள குட்டிகள்
உறவு களோடும் கூடலாம்.
உலகம் உன்னால் நிலவும் தன்னால்
விலகும் அழிவும் இந்நாள்.

வாதம் பேதம் பேட்டிகள் எல்லாம்
வாழ உதவா பேச்சுக்கள்.
சாதி மதங்கள் சச்சரவு களெல்லாம்
சாதிக்க ஆகா கூச்சல்கள்.
வேதங்கள் எல்லாம் பேதங் களையத்தான்
ஓதும் போதனை சத்தியங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment