Thursday, 23 April 2020

தன்னலம்!உன்னலம்!

உன்னலம் முக்கியம் காத்திடு!
தன்னலம் சௌக்யம் ஆகிடு.
சுயநலம் நீயும் பார்த்துக்கோ!
பொதுநலம் வாழும் கேட்டுக்கோ.

பாவம் சும்மா ஓயாமல் பேசி,
ஆவது என்ன நீ யோசி!
வீட்டுள் சும்மா அடங்கிக் கிடந்தாலே
நாட்டுள் நடக்கும் எல்லாம் நலமே.

சாதி மதங்கள் பேதங்கள் பாராமல்,
சகட்டு மேனிக்கு கொரோனா பேசாமல்;
ஊதீ அழிப்பதை ஒழிக்கச் சேராமல்
வீதீயில் வீணே பேச்சென்ன கூசாமல்!

சும்மா நீவீர் இருந்தாலே போதும்
பம்மாத்து எதற்கு பயனென்ன ஆகும்!
கொரோ னாவை கொன்றொழிப்போம்
உறுதி கொள்வோம் அரசிணைவோம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment