வெண்ணை திரளும் நேரத்தில்
மண்தாலி உடைந்தது போல்
கண்கள் திறக்கும் தருணத்தில்
வெண்சுடர் அணைந்தது போல்
பாரதப் பொருளாதரம்
சீராகும் காலத்தில்
கொரோனாக் கோரத்தால்
சரிந்ததோ! அய்யகோ!
பேரிடர் பெருந் துயரம்
சீராக ஆகுந் தூரம்
கூறத்தான் கூடுமோ!
காலந்தான் கைதூக்கும்.
ஜப்பானின் நோக்கமும்
சாதித்த ஊக்கமும்
ஒப்புவோம் நம்புவோம்
ஒருங்கிணைவோம் தப்புவோம்.
சாதிமதப் பேதமெல்லாம்
சாதிக்க உதவாது.
மோதிக் கொள்ளும் வாதமெல்லாம்
நீதி செய்யப் போதாது.
சிலந்தி கட்டும் வீட்டைப்போல்
சீர்செய்வோம் நாட்டை மேல்
வெறிகொண்டு வெற்றி கொள்வோம்
நெறிகண்டு பற்றிச் செல்வோம்.
அரசியல் செய்யுந் தீரம்
சரியல்ல இது நேரம்.
உரிமைநம் உயிர் நாடு
பெருமைகொள் செயல் நாடு.
மனிதவளம் நமது பலம்
இனியென்ன வேறு களம்.
யோசிக்க நேரம் இல்லை.
யாசிக்கத் தேவை இல்லை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment