கொரோனாகூட பரவாயில்ல ஒளிஞ்சிக்கலாமே--ஆனாசில
அரக்கர்களின் கொடுமைதான
பொறுக்க முடியல.
தொலைக்காட்சி பெட்டிகள
விலக்கி வையுங்க--விவாத
அலப்பரைக தொல்லைக்கு
முழுக்குப் போடுங்க.
இரத்த அழுத்தம் ஏத்திவிட்டு
சாகடிக்காங்க.
கொரோனாவிட மோசமான பாவி இவங்க.
ஏபார நோக்கந்தான வேற என்னவோ!
விவாதக் கூச்சலால ஆவது என்னவோ!
வெட்டிப்பேச்சுப் பேசிக்கட்டும் பொட்டணந்தானோ!
ஒட்டாது ஒட்டாது ஓழிஞ்சு போகட்டும்--பேச
விட்டால் நாடும் பாவம் அழிஞ்சு போகுமே!
அவசரச் சட்டம்போட்டு அடக்கி வச்சாத்தான்:
அவசியம் இல்லாதெல்லாம் முடங்கிக் கிடக்கும்.
என்னென்னமோ பேசிப்பேசி நாசமானதே--கொஞ்சம்
ஜனநயகம் ஒத்தி வச்சா மனிதம் வாழுமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment