ஒன்பதில் ஒன்பது
என்பது அடையாளாம்.
இந்நாள் வரலாறாம்.
ஒன்பது மணிக்கு
ஒன்பது நிமிடம்
கண்டது அதிர்வானது.
ஒன்பதுக்குப் பின்னாலே
உன்னிழல் தன்னாலே
ஒழிஞ்சது கண்ணிலே.
மனிதன்நீ தெளிஞ்சுக்கோ!
தனித்துநீ ஒளிஞ்சுக்கோ!
புரிஞ்சதா தத்துவம்!
உன்னலம் நினைந்தாரை
தன்னலம் மறந்தாரை
எண்ணலாம் இந்நாளை.
கொரோனாவைக் கொல்லத்தான்
ஒருங்கிணைந்தோம் சொல்லத்தான்.
இருளிது சாட்சியம்.
மக்களின் ஆதரவு
திக்கெல்லாம் உறுதியாய்
சக்தியாய் ஒளிர்ந்தது.
நம்மரசு நமக்காக
எம்முயற்சி எடுத்தாலும்
சம்மதம் சந்தோசம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment