என்னடா இது அரசியல்
ஒன்னுமே நிசமா புரியல!
என்னதான் நடக்குது நாட்டுல-இது
பண்ணுற நேரமா அரசியல்?
சோதனைக் காலம் இதுதா னோ!
வேதனைக் கோலமும் விலகாதோ!
ஒற்றுமை என்பது இருந்தாலே,
கட்டுக்குள் அடங்கும் கொரோனாவே.
காட்டுத் தீயைப் போலவே;
நாடே பற்றி எரியிதே;
வாதம் பேதம் வீணாலே;
ஊதித் தீயை வீசாதே.
தேர்தல் வருமா புரியல.
யார்தான் பிழைப்பார் தெரியல.
பிழைத்தால் பார்க்கலாம் தேர்தலை
இணனந்தால் வெல்லலாம் கொரோனாவை.
குடும்பங்கள் வளர்க்க கட்சிகளா?
அடிமைகள் சிலர்க்கு கொள்கைகளா?
இதுதான் இந்திய அரசியலா?
அதுதான் கேள்வி கொரோனாவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment