Thursday, 9 October 2025

பருவ வயது.

பேச்சு வரவில்லை.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது.
கதப்பில் தானோ அவள்முகம் கூசுது. 

கண்ணீ ரோடு சொற்கள் கரைகிறது.
வெந்நீ ராக வேர்வை விரைகிறது.
தழுவும் சுகத்தில் தணிந்து குளிர்கிறது
முழுதும் நனைந்து தண்நீர் துளிர்கிறது.

விலகிப் போனால் வெப்பம் சுடுகிறது.
பழகித் தானே பக்கம் தொடுகிறது.
பிரிந்த ஏக்கம் பேச்சை அடைக்கிறது.
பரிந்துரை செய்ய பாசை இடர்கிறது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ!
அறிந்தவர் தேடி யவள்மொழி தேடுமோ!
சேதிகள் பரிமாற சேடியர் நாடுமோ!
வாதம் மறந்து வாடிக்கை கூடுமோ!

கண்ணீர் துளிகள் காதல் மொழிகிறது.
எண்ணும் மொழிகள் மோதி வழிகிறது
கன்னம் கனிந்து காதல் சிவக்கிறது.
எண்ணம் நிறைந்து இன்பம் பயக்கிறது.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




No comments:

Post a Comment