அனுபவம் தான் பாடங்கள் --அதை
அனுப வித்துத் தேடுங்கள்.
தேடி யதைப் படியுங்கள்--அதில்
படித் ததைப் பற்றுங்கள்.
அரசைக் குறைச் சொல்லாமல்--நாமும்
புருச இலட்சனம் காப்போமே!
மது வில்லா நாடில்லை.--அங்கு
மதுக் குடியாப் பேரில்லை
அரசு அதைத் தொட வில்லை--அதில்
வரு மானமும் தேட வில்லை
குடும் பத்தில் பொறுப் பில்லை.--கெட்ட
குடி யதை மறக்க வில்லை.
அப்பா வைப் போ லோரு
ஆளி ல்லை என்ற பிள்ளை.
அவர்ப போல மனிதரில்லை.--என
அப் படியும் புகழ்ந்த மகன்.
ஐஐந்து வயதுக் கடந்து--அவன்
மனுசனே இல்லை என்றான்.
கண் டிக்கும் அப்ப னுக்கு
தண் டிக்கத் தகுதி யில்லை.
குடும் பத்துத் தலை வனுக்கு--ஊர்
குடி காரப் பட்டம் தந்தார்.
பிண மாகத் தினந்தினம்--மனம்
குண மாகா நோயானான்.
மனைவி மக்கள் மதிக்க வில்லை.
மனம் போல் வாழ்க்கை யில்லை.
பைத் தியக் காரன் என்றான--அப்பனை
கயிற்றாலே கட்டிப் போட்டான்.
வைத் தியம் தேடி மகன்--சவத்தை
நூற்று எட்டில் ஏற்றிப் போனான்.
தூற் றுவார் தூற்றட்டும்
போற் றுவார் போற்றட்டும்--பழி
பாவம் செய்தார் ஏற்கட்டும்.
இலாபம் என்ன அடையட்டும்
சாபங்கள் பலிக்கட்டும்--அனுபவப்
பாட மென்னப் படிக்கட்டும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment