வெற்றி உனதே ஓடிவா!
தட்டிப் பாடிவா வெல்வது நீயே!
கவலைகள் உன்னை வாட்டும்.
ஆசைகள் கனவைப் பூட்டும்--நீ
அயர்ந்து விடாதே ஓடி வா!
உலகம் உன்னைத் தூற்றும்--வீண்
கலகம் பன்னத் தூண்டும்
கனவுகள் தானுன் இலட்சியம்
கதவை உடைத்து ஓடி வா--எதிர்
காலம் உனது தேடி வா!
தோல்விகள் கண்டு துவளாதே--வெற்றி
வேல்விகள் என்பதை மறவாதே!
தேடல் அங்கே காத்திருக்கும்,
தேவைக் கானது வைத்திருக்கும்--உன்
தேர்வு எதுவனௌ அறிந்திருக்கும்.
இலட்சியம் தானது கனவாகும்--அந்த
எண்ணம் தானது நினைவாகும்.
அலட்சியம் செய்து சோராதே!
அடைந்திடும் வெறியில் ஆறாதே--அது
ஆவதும் நெறியில் மாறாதே.
அச்சப் பட்டால் முடக்கிவிடும்--அது
துச்சம் என்றால் அடங்கி விடும்.
எண்ணிய முடிப்பது சாதனை.
எண்ணா திருப்பது வேதனை--எதுவும்
உன்னிடம் தானது ஆவன.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment