Monday, 27 October 2025

சொந்தமுன்னா என்ன?

சொந்தமுன்னா என்னடா?

சொந்த முன்னா என்னடா?
சொன்ன தெல்லாம் சும்மாடா.
வந்தது தான் எதுக்கடா?
வாழ்ந்த வரை அதுக்கடா.

கோடி கோடி சேத்து வச்சு
வீடு வாசல் கட்டி வச்சு 
கோடி மூடித் தூக்கும் போது
கூட வர என்னடா?

மனைவி ஒருத்தி இருந்தான்னா 
மந்தை வரை அழுதிடு வாள்.
காடு வரை பிள்ளை வரும்.
வீடு திரும்பி தலை முழுகும்.

தலை முழுகி துவட்டி யாச்சு
அழுத சோகம் முடிஞ்சு போச்சு.
வந்த சொந்தம் திரும்பி யாச்சு
இந்தப் பந்தம் கடந்து போச்சு.

பெத்துப் போட்டுத்  தொலைஞ் சாங்கடா,
சொத்தும் விட்டு மறைஞ் சாங்கடா,
நானும் விட்டுப்  போறேனடா
யாருக் கிங்கு சொந்த மடா?

ஊரு மட்டும் இருக்குமடா!
ஒன்னு ஓன்னாப் பறக்குமடா.
யார் யாரோ வருவாங்கடா.
பேரழிஞ்சும் போவாங்கடா.

சொந்தம் ஏது சொல்லடா?
சொன்ன தெல்லாம் சும்மா டா.
வந்த வழி அழிஞ்ச பின்னே
எங்கே ஏது சொந்த மடா?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment