Monday, 20 October 2025

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

இதுதான் வாழ்க்கை.

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

அடிக்கிற கொள்ளை முடிப்பது இல்லை
படிப்பது மட்டும் நீதியடா.

கொடுத்ததும் எடுத்ததும் சரியாப் போச்சு
படுத்ததும் கணக்கு முடிஞ்சு போச்சு
வந்ததும் வாழ்ந்ததும் கொண்டதும் என்ன?
எந்ததும் எவர்க்கும் சொந்தம் என்ன?
முந்தியும் பிந்தியும் போவது தவிர இருந்தது நிலையென எவரடா?

அறுசுவை ருசியும் அனுபவக் காமமும்
புரிந்ததும் என்ன சொல்லடா.
அருத்தம் திருத்தம் பழகிய தெல்லாம்
ஆசைத் தூண்டல்  சொல்லுமடா.
அப்பன் ஆத்தா செய்த பாவங்கள் ஆக்க மகி வந்தமடா.
தப்புனு தெரிஞ்சும் மப்புலத் தப்புச் செஞ்சது தொடரும் உலகமடா.

வாழ்க்கை என்பது பூஜ்யம் ஆண்டதும் என்னடா இராஜ்யம்?
பணமா குணமா எதுதான் நிசமோ கண்டதும் என்ன சொல்லடா.
தானா விரும்பி பூமியில் பிறந்து வேண்டிய சுகங்கள் கண்டவரார்?
சமதள மில்லா மேடு பள்ளங்கள் எவர்தான் வாழ்ந்தார் விருப்பங்கள்.

பிறந்த நாள்முதல் வளரந் தோமே.
இறக்கும் நாளதை அறிந்தோமா.
ஆளா வளர்ந்ததும் சோறால
நாளாம் இறப்பதும் யாரால?
பிறந்ததும் இறப்பதும் நாமல்ல
இறைவன் இரகசியம் நமதல்ல.
இருப்பது எதுவரை தெரியல.
இரப்பதும் வாழ்நாள் வரமல்ல.
வாழும் வரைதான் வாழ்க்கையடா.
போகும் வரையும் சேவையடா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



No comments:

Post a Comment